Sunday, May 31, 2009

திருப்பரங்குன்றத்தில் காவடி நிகழ்ச்சி



திருப்பரங்குன்றத்தின் குன்றினை வலம் வருகையில் குன்றின் ஒரு அழகிய வடிவம் 
* * * *


கிரிவலப் பாதையில் ஆனந்தமாய் வசித்திருக்கும் மந்தி
* * * * *


எங்கள் வீட்டு வழக்கமாய், உபநயனம் ஆகும் முன் எங்கள் குல தெய்வமாய் விளங்கும் குமரனுக்கு,  அறுபடை வீட்டில்,   முதலாம் படை வீடாம் திருப்பரங்குன்றத்தில், காவடி எடுக்கத் தயார் நிலையில் எனது குமாரன் கார்த்தி.
* * * *


காவடி எடுக்கும் தன் அண்ணனுக்கு ஆட்டங்கள் ஆடி களைப்பு தெரியாமல், சந்தோஷமான தருணத்தை தந்து கொண்டிருந்த எனது அண்ணன் மகள் ஜ்யோத்சனா ஸ்ரீ
* * * *

கார்த்தியுடன் நான்
* * * *

குடும்ப உறுப்பினர்கள் ( இளைய தலைமுறையினர்)
* * * *

கார்த்தியுடன் எனது அப்பா (கழுத்தில் துண்டு போட்டிருப்பவர் ) மற்றும் எனது பெரியப்பா, தம்பி பாலாஜி

காவடி எடுத்திட தனயனுக்கு உதவிடும் தாய்
* * * *

காவடி எடுத்து செல்லும் என் அன்புக் குழந்தை
* * * *

பெரியம்மா மற்றும் தங்கையுடன்
* * * *

ராமேஸ்வரத்தில் எங்கள் குடும்பம்


பாம்பன் பாலத்தில் இருந்து காட்சியளிக்கும் ராமேஸ்வரத் தீவின் அழகிய காட்சி

பாம்பன் பாலத்தினை ஒரு விசைப் படகு கடந்து செல்லும் ஒரு இனிய காட்சி

பாம்பன் பாலத்தில் இருந்து எடுக்கப்பட்ட இப்புகைப்படத்தில் தென்படுவது அங்கு மீன்களை இரையாட வட்டமிட்டுத் திரியும் கருடப் பறவை.


எத்தனை தடவை பார்த்தாலும், எப்படிப் பார்த்தாலும் அழகாய் காட்சியளிக்கும் பாம்பன் பாலத்தைதான் மேலே க்ளிக்கியுள்ளேன்

Thursday, January 22, 2009

ஷீரடி சுற்றுலால எடுத்த சில படங்கள்


சனி சின்ஞாபுருக்கு செல்லும் பொழுது களிப்புந்து அதுதாங்க கார்ல போகும்போது என்னையும் சுரேஷையும் செண்பக கணேசு க்ளிக்கின படம்தாங்க இது





என்னையும் செண்பக கணேஷையும் சுரேஷ் க்ளிக்கினதுங்க இது
நம்மூர்ல கரும்பு பிழிய தனிய ஒரு மிஷன் இருக்கும். ஆனா இங்க மகாராஷ்ட்ரால மாட்ட வச்சு செக்க்குல ஆயில எடுக்கறா மாதிரி எடுத்து தராங்கோ. விலை என்னமோ சல்லிசாதங்க இருந்துச்சு



அதே படம்தான் கொஞ்சம் தள்ளி வச்சு எடுத்தது

எங்களுக்காக கஷ்டப்பட்டு உழைச்ச வாயில்லா ஜீவன ஒரு தபா க்ளிக்கியிருக்கேன். சரிதானே?


ஷீரடி விஜயம்

சாவடி யாத்திரையை பரவசமாய் பார்த்திடும் பச்சிளம் பாலகன்




சாவடி யாத்திரையின் சில காட்சிகள்

ஸ்ரீ சாயி பாபா தங்கி இருந்த த்வாரகா மாயி எனப்படும் ஒரு மசூதி

ஸ்ரீ சாயி சமாதி மந்திரின் விமானம் பகலின் மாட்சியில்

ஸ்ரீ சாயி சமாதி மந்திரின் விமானம் இரவில் மின்னொளியில் மின்னும் அழகு

மதுரையை சேர்ந்த சுரேஷ் மற்றும் செண்பக கணேஷ் என்னும் இரு நண்பர்களுடன் கடந்த 2008 ஆம் வருடம் டிசம்பர் மாதம் மராட்டிய மாநிலத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சாயி பாபா தன் வாழ் நாள் முழுதும் தங்கி தன் அருளை செலுத்தி, உலகப் புகழை அடையச் செய்த சிறிய கிராமமான ஷிர்டிக்கு, சென்று அம்மகானின் அருளைப்பெற அங்கு சென்றேன். அங்கு எடுக்கப்பட்ட சிலப் படங்களை உங்களின் பார்வைக்கு வைக்கிறேன்.



Sunday, November 9, 2008

மதுரைத் தேரோட்டம் 2008

நான் கடந்த 2008 ஆம் ஆண்டு மதுரையில் நடந்த சித்திரைத் திருவிழாவிற்கு சென்றிருந்தேன். அதில் நடந்த தேரோட்ட நிகழ்ச்சியில் ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு கலந்து கொண்டேன். இதற்கு முன் நடந்த திருவிழாக்களில் புகைப்படம் எடுக்க வசதி இல்லாமல் இருதது. இம்முறை அக்குறை இல்லாததால் தேரோட்ட அழகினை களிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தேரின் சிற்ப வேலைப்பாட்டினை காணும்போது பாரத பூமியில், அதுவும் தென்னகத்தில், தமிழகத்தில், மதுரையில் பிறப்பெடுக்கும் வாய்ப்பு கொடுத்த இறைவனுக்கு நன்றி சொல்ல வேண்டும். நான் கண்டு மகிழ்ந்த புகைப்படத்தின் சிலத் தொகுப்புகள் உங்கள் பார்வைக்கு.

அசைந்தாடி வரும் தேரின் அடிப்பாகத்தில் கண்ணைப் பறிக்கும் விதத்தில் அமைந்துள்ள இறைவனின் திருக்கோலங்கள்

அசைந்து அசைந்து ஆடி வரும் இறைவனின் தேரின் கம்பீரத் தோற்றம்

வண்ணமையத் தேரில் வனப்பாய் அமர்ந்து காட்சியளிக்கும் சோமாஸ்கந்த மூர்த்தத்தின் தோற்றம் இது.
அண்ணலைத் தொடர்ந்து வரும் அங்கயற்கண்ணியின் அருள் ரதம், உலா வரும் நேரமிது.

மதுரை சித்திரைத் திருவிழா

2008 ஆம் ஆண்டு மதுரையில் நடைபெற்ற சித்திரைத் திருவிழாவின் திருக்கல்யாணத் தினத்தன்று எடுக்கப்பட்ட புகைப்படங்களின் மற்றும் வீடியோ காட்சிகளின் அணிவகுப்பு. திருக்கல்யனத்தன்று அண்ணலின் அழகிய வதனத்தில் என்றுமில்லாத ஆனந்தமும், பெருமிதமும் கலந்து உயிரோட்டமாய் இருக்குமென்றால், அன்னையின் முகத்திலோ நாணமும் சந்தோஷமும் போட்டி போட்டு விளங்கும் என்றால் அது மிகையல்ல.

நான் மதுரையில் வாழ்ந்த காலத்தில், சிறு குழந்தையாய் இருந்த காலத்தில் ஒரு அதிர வேட்டு கேட்டவுடன், வடக்கு மாசி வீதிக்கு செல்வோம். அங்கு ஆண்டவனின் தரிசனம் பெற செல்வோம். பின்னர் அந்த அதிர வேட்டுக்கும் வேட்டு வைத்தார்கள் புண்ணியவான்கள். அதன் பின்னர் வெகு காலம் ஆயிற்று, மீண்டும் அன்னையின் தரிசனம் பெற.

இப்பொழுதெல்லாம் குழந்தைகளின் கோலாட்டம், கேரளா வாத்யம், பொய்க்கால் குதிரை, கரகம் என்று பழங் கலைகளின் புதிய அணிவகுப்பு. இதில் என்றும் மாறாதது, திருவிழா நாட்களில் மட்டுமே கிடைக்கும், ரோஸ் மிட்டாய், தேன் மிட்டாய் அதனை சுமந்து வரும் ஸ்டாண்ட், மண்ணெண்ணெய் விளக்கு.

அம்மை, அப்பனின் தரிசனம் பெறுங்கள், இனி அதிகம் பேசாமல் அவ்வப்பொழுது சிறிய விளக்கமளிக்க வருகின்றேன்.


யானை வாகனத்தில் வரும் அப்பன், அன்னை பிரியாவிடையுடன்
(சோமாஸ்கந்த மூர்த்தம்)
* * * *

நாணமும், மகிழ்ச்சியும் நடனமாட பல்லக்கினில் பவனி வரும் அன்னை மீனாக்ஷி
* * * *

அம்மையப்பனின் திருமணம் காண வந்த குன்றாது முருகப் பெருமான்.
* * * *


தங்கையின் திருமணத்தில் தாரை வார்த்துத் தரும் சேவையினை செய்திடும் அண்ணனாக திருப்பரங்குன்றத்தில் இருக்கும் பவளக்கனி வாய்ப் பெருமாள் கருட வாகனத்தில் உலா வரும் மாட்சி.
* * * *

நகரா எனப்படும் முரசினைத் தன் முதுகினில் எடுத்து வரும் கோயில் காளை.
* * *
தன் வீட்டுப் பெண்ணான மீனாக்ஷிக்கும், மாப்பிள்ளை சுந்தரேஸ்வரருக்கும் திருமண மரியாதை செய்யக் காத்திருக்கும் மதுரை மக்களில் ஒரு குடும்பம்.
* * * *

அங்கு எடுக்கப்பட்ட மொக்கைப் படம், பஞ்சு மிட்டாய் மற்றும் பலூந்தங்க அது.


மதுரையில் மேல மாசி வீதியில் ஆரிய பாவன் அருகில், பூக்கொட்டும் இடம் என்று அழைப்பார்கள். அங்கு இரு பொம்மைகள் கையில் மாலையும், ஒரு கூடையில் உதிரி புஷ்பங்களும் வைத்து ஒரு கயிற்றில் கட்டப் பட்டிருக்கும். அதனை கீழிருந்து ஆட்டி வைப்பார்கள், அந்த பொம்மைகள் இறைவனுக்கும், இறைவிக்கும் மாலை மரியாதை செய்யும். இதனை பார்ப்பதற்கு என்றே அங்கு அதிகக் கூட்டம் இருக்கும். அங்கு எடுக்கப்பட்ட வீடியோ காட்சி (ஒலி இல்லாதது). மேலே இறைவனுக்கும் கீழே இறைவிக்கும். (இறைவன் யானை வாகனத்தில், இறைவி புஷ்ப பல்லக்கினில்)


Saturday, October 11, 2008

ஹிந்தி இருவாரக் கொண்டாட்டம்



கடந்த செப்டம்பர் 15 அன்று எங்கள் அலுவலகத்தில் ஹிந்தி இருவாரக் கொண்டாட்டம் நடைபெற்றது. அந்நிகழ்ச்சியில் நான் வரவேற்புரை நிகழ்த்தினேன். நிகழ்ச்சியில் எங்கள் முதன்மை பொறியாளர் (Chief Engineer(E)SR) தலைமை தாங்கினார். தக்ஷின பாரத ஹிந்தி பிரசார் சபாவின் தேர்வு செயலாளர் திரு ஜெயராஜன் அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார். அந்த நிகழ்ச்சியில் எங்களுடன் பணியாற்றும் திருமதி ஜெயமணி அவர்கள் நிகழ்ச்சி தொகுப்பு பணியை செவ்வனே செய்தார்கள். திரு ரோகித் நன்றியுரை நவின்றபின் தேசிய கீதத்துடன் நிறைவடைந்தது. நிகழ்ச்சி ஏற்பாடுகள் அனைத்தையும் திருமதி நந்தினி திருமதி லக்ஷ்மி ஆகியோர் செவ்வனே செய்திருந்தார்கள். அந்நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட சிலப் புகைப்படங்கள் மேலே வெளியிடப்பட்டுள்ளது.